• Apr 23 2024

உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை- நெகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன்.இவர் இதனைத் தொடர்ந்து தானே இயக்கி நடித்திருந்த திரைப்படம் தான் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

இப்படத்தில் பிரதீப்புடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.,ப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில், இது குறித்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆவதையும் குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.


தமிழ்நாட்டிற்கு வெளியில் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேசியா). நான் நட்சத்திரம் இல்லை உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement