• Sep 20 2024

நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் சந்தானம்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா, என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

குறுகிய காலத்தில் விஜய், அஜீத், என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். இதையடுத்து நகைச்சுவை வேடங்களில் குறைத்துக் கொண்ட சந்தானம் தற்போது நடிகராகவும் நகைச்சுவையாளர் ஆகவும் கதாநாயகன் வேடத்தில் நடித்து வருகின்றார் இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தில் பெரிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு பெரிய தொகையை கட்டிட காண்டிராக்டர் சண்முகசுந்தரத்திடம், நடிகர் சந்தானம் கொடுத்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த பணி நின்று போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, தான் கொடுத்த பணத்தை நடிகர் சந்தானம் கேட்டபோது பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வளசரவாக்கத்தில் உள்ள கட்டிட காண்ட்ராக்டரின் அலுவலகத்தில் தனது மானேஜருடன் சென்று பணத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் இதில் மாறி, மாறி தாக்கி கொண்டதில் கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் நடிகர் சந்தானம் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் சந்தானம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இன்று மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மீண்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் சந்தானம் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement