• Sep 20 2024

நாங்கள் இருவரும் ரியல் லைஃப் டாம் அண்ட் ஜெர்ரி போலத்தான் இருப்போம்- வடிவேலு குறித்து பேசிய பிரபுதேவா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் பிரபு தேவா. இவர்
மௌன ராகம் படத்தின் மூலம் நடனக் கலைஞராக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து இது என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி ஐ பி, என்று தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான போக்கிரி படத்தினையும் இவர் தான் இயக்கி இருந்தார்.

தொடர்ந்து வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற பல படங்களை இயக்கினார். ஹிந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவரும் வடிவேலும் சேரும் காம்போ ரொம்ப ஹிட்டானது. இந்த நிலையில் பிரபுதேவா வடிவேலுவுடன் தனது பிரண்ட்ஷிப் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் ரியல் லைஃப் டாம் அண்ட் ஜெர்ரி போலத்தான்.. நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் பேசிக்கொண்டே இருப்பேன், அவரும் கேட்டுக் கொண்டே இருப்பார். நாங்கள் இருவரும் மிகவும் ஜாலியாக இருப்போம். வடிவேலுவின் சிறந்த 10 ரசிகர்களில் நானும் ஒருவன். நான் வடிவேலுவின் ரசிகன் என்று சொல்வதில் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ரசிகர்கள் மீண்டும் இருவரும் இணையும் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவா பார்த்துக் கொண்ட பொழுது அதே "சிங் இன் தி ரைன்" என்ற பாடலை வடிவேல் பாட, அது சமூக வலைதளத்தில் வைரலாகவும் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement