• Sep 15 2025

ரெட் கார்டு விவகாரம்... தயாரிப்பாளர் சங்கம் முடிவு... ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் தனுஷ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் குபேரா படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார்.  நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷே இயக்கி நடித்த அவரின் ஐம்பதாவது படமான ராயன் நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனையையும் படைத்தது.


மறுபக்கம் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றிலும் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கவுள்ளது. இந்நிலையில் தனுஷ் தற்போது தான் இயக்கப்போகும் அடுத்த படத்தின் வேலைகளுக்காக வெளிப்புற படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். ஆனால் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் முரளி ஆகியோர் தனுஷ் மீது புகார் அளித்துள்ளனர். 


முரளி தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் பண்ணுவதாக ஒப்புக்கொண்டார். அதைப்போல பைவ் ஸ்டார் கதிரேசன் கொடுத்த முன்பணத்தை வட்டியுடன் திருப்பி தருவதாகவும் தனுஷ் கூறியிருக்கின்றார். ஆனால் தனுஷ் தனக்கு 30 கோடி தரவேண்டும் என கூறி வருகின்றார் கதிரேசன். இதன் காரணமாக இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது. இதற்கு ஒரு முடிவு வந்தால் தான் தனுஷ் மீது இருக்கும் ரெட் கார்டு நீங்கும். அதன் பிறகு தான் தனுஷ் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்க முடியுமாம். 

Advertisement

Advertisement