• Feb 14 2026

அவமானங்களைத் தாண்டி ஹீரோவாகும் திவாகர்.. திரிஷா போல மனைவி வேணும்.! வைரலான பேச்சு

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 மூலம் மக்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றவர்களில் ஒருவர் தான் வாட்டர் மெலன் திவாகர். தனது தனித்துவமான பேச்சு, வெளிப்படையான கருத்துகள் மற்றும் சர்ச்சை நிறைந்த செயல்களால் குறுகிய காலத்திலேயே சமூக வலைத்தளங்களில் வைரலான முகமாக மாறியவர். குறிப்பாக தன்னைத் தானே “நடிப்பு அரக்கன்” என்று அவர் அடிக்கடி கூறிக் கொள்வது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை ஓரளவு மட்டுமே அறியப்பட்டு வந்த திவாகர், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு பிரபல முகமாக மாறினார். நிகழ்ச்சியில் அவர் எதிர்கொண்ட அவமானங்கள், கேலி, கிண்டல்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதே அவரது தற்போதைய வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இதுகுறித்து அவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்து பேசினார்.

அந்த சந்திப்பில் பேசிய திவாகர், “பல அவமானங்கள், கேலி, கிண்டல்கள் தாண்டி ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்போதும் பார்க்காத ஒரு கோணத்தில் ஒரு நடிப்பு அரக்கனை வெள்ளி திரையில் நீங்கள் விரைவில் காண்பீர்கள். எனக்கு வரவிருக்கும் மனைவி திரிஷா, சமந்தா போல இருந்தால் நன்றாக இருக்கும்.’’ என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement