• Sep 20 2024

மீண்டும் வில்லனாக கலக்கப்போகும் சூர்யா…யாருடைய இயக்கத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக இருந்து வருபர் தான் நடிகர் சூர்யா.

இவர் தற்போது வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இயக்குநர் சிவா இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல், ரவிக்குமாரின் படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படம் என அவருக்கு வரிசைகட்டி படங்கள் நிற்கின்றன.

மேலும் இதைத்தொடர்ந்து சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தனது 2D நிறுவனம் சார்பாக தரமான படங்களையும் தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து மிரட்டியிருப்பார்.

ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் சூர்யா.மேலும் இதைத்தொடர்ந்து விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் சூர்யா தான் வில்லனாக நடிக்கவேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24 . அத்தோடு டைம் ட்ராவலை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவான இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.

எனினும் குறிப்பாக ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இயக்குனரான விக்ரம் குமார் 24 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறினார்.

மேலும் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் கதையை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இதனை கேட்ட ரசிகர்கள் மீண்டும் சூர்யாவை வில்லன் கதாபாத்திரத்தில் பார்க்க ஆவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement