• May 19 2024

கம்பெனியை இழுத்து மூடிய கோபியிடம் ராதிகா கேட்ட கேள்வி, பாக்கியாவால் சந்தோசத்தில் இருக்கும் இனியா-Baakiyalakshmi Serial

stella / 4 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி தன்னுடைய கம்பெனியை இழுத்து மூடிவிட்டு வீட்டிற்கு வருகின்றார்.அப்போது ராதிகா என்ன இவ்வளவு சீக்கிரமாக வந்திட்டீங்க வேலை முடிஞ்சுதா என்று கேட்க கோபியும் முடிந்து விட்டது என்று சொல்கின்றார்.அப்போது ராதிகா என்னோட ப்ரெண்டோட ஹஸ்பண்டுக்கு வேலை போயிடுச்சுதான் உங்க கம்பெனில வேலை கொடுக்க முடியுமா என்று கேட்கின்றார்


இதனால் கோபியும் என்ன சொல்வதென்று தெரியாமல் வேலை கொடுப்பதற்கு சம்மதிக்கின்றார். தொடர்ந்து பாக்கியாவும் ராமமூர்த்தியும் எழிலும் ரெஸ்ராரன்ட் ஆரம்பிப்பதற்காக எழிலுக்கு தெரிந்தவருக்காக ஹொட்டல் ஒன்றில் காத்திருக்கின்றனர்.பின்னர் அவர் வந்ததும் பணத்தைக் கொடுத்து ரெஸ்ராரன்ட் வாங்கியதற்கான அக்ரிமென்ட்லையும் சைன் வைக்கின்றார்.

தொடர்ந்து வீட்டு வரும் எழில் பாக்கியா புது ரெஸ்ராரன்ட் ஓபன் பண்ணப் போகும் விஷயத்தைச் சொல்கின்றார்.இதைக் கேட்ட எல்லோரும் சந்தோசப்படுவதோடு பாக்கியாவைப் பாராட்டுகின்றனர்.இதைக் கேட்ட கோபி ஆத்திரப்படுகின்றார்.மறுபுறம் செழியன் மன்னிப்புக் கேட்டு  ஒரு பூக்கூடையை ஜெனி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்


ஆனால் அந்தப் பூக் கூடையை எடுத்த ஜெனியின் அப்பா செழியனைத் திட்டியதோடு இந்த பூக்கூடை அவ கண்ணில் படவே கூடாது என்று மறைத்து வைக்கின்றனர். பாக்கியா முன்னேறுவதைப் பொறுக்க முடியாத கோபி தன்னுடைய நண்பருடன் சென்று பாரில் குடி குடியென குடிக்கின்றார். 


அத்தோடு நான் கீழே சறுக்க சறுக்க பாக்கியா வாழ்க்கைல முன்னேறிட்டு போறா எனப் பொறாமைப்படுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 

Advertisement

Advertisement