நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனை வெளியிட்ட மாளவிகா ரகுநாத்துக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
பிரபலங்கள் தங்களது நண்பர்களுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடும்போது, அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது தனியுரிமையில் தலையிடும் செயல் என பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், பிரபலங்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருப்பதாகவும், அடிப்படை நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மாளவிகா ரகுநாத், “திரிஷா ஒரு பொதுவான இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது தனியுரிமையில் தலையிடாமல், தூரத்திலிருந்துதான் புகைப்படம் எடுத்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து, பிரபலங்களின் தனியுரிமை மற்றும் பொது இடங்களில் புகைப்படம் எடுப்பது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
Listen News!