• Apr 15 2026

இளையராஜாவின் பிரம்மாண்ட இசை வெற்றி...! சிம்பொனியைப் பாராட்டிய பிரதமர்..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

 இசைஞானி இளையராஜா தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்திய இசையின் சர்வதேச அடையாளமாகவும் வலம் வருகின்றார். இவர், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த மாதம் லண்டனில் நிகழ்ந்த இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இது அவரது இசை வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. உலகளவில் மிகப்பெரிய இசை மையங்களில் ஒன்றான லண்டனின் அப்பலோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். இந்த சந்திப்பில், இளையராஜா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் பிரதமருடன் இசை குறித்து உரையாடியும் உள்ளார்.

இந்த சந்திப்பு இந்திய இசை மற்றும் அரசியல் வட்டாரங்களில் முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்திய இசைக்கு அரசியல் ஆதரவும், சர்வதேச அங்கீகாரமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement