• Jan 26 2026

ஒரு வருடம் நிறைவு.! காதல்-கவிதையின் முதலாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சினேகன்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பாடலாசிரியர், நடிகர் மற்றும் பேச்சாளர் எனப் பல திறமை வாய்ந்தவராக இருக்கும் சினேகன், சமீபத்தில் தனது குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகிறார். இவர் தனது காதலியையும் நட்சத்திர நடிகையாகவும் விளங்கும் கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். 


தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை ஒரே நேரத்தில் சமாளித்து வரும் இந்த தம்பதியர், கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக ஆன மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்தனர். அந்த இரட்டை குழந்தைகளுக்கு அவர்கள் அன்புடன் “காதல்” மற்றும் “கவிதை” என பெயர்கள் வைத்துள்ளனர்.

இப்போது, காதல் மற்றும் கவிதையின் முதல் பிறந்த நாளை நேற்று சிறப்பாக கொண்டாடி உள்ளனர் சினேகன் குடும்பம். 


நிகழ்ச்சியில், குடும்ப உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். எனினும், சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் இணையத்தில் போட்டோக்களையும் பதிவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement