• May 20 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து இனியா விலகுகின்றாரா?- சன்டிவி கொடுத்த புதிய வாய்ப்பு- இதை எதிர்பார்க்கலையே...

stella / 4 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

சீரியலின் கதைப் படி கோபி மீண்டும் ராதிகா உடன் பாக்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ராதிகா பாக்கியாவுடன் சண்டை போடாமல் பாக்கியாவுக்கு ஆதரவாக இருப்பது தான் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்பொழுது செழியன்-ஜெனி, எழில்-அமிர்தா திருமண வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் வந்திருக்கிறது. இதனால் கதை தற்போது பரபரப்பாக நகர தொடங்கி இருக்கிறது.

செழியன் ஜெனி விஷயம் விவாகரத்து வரை சென்று விட்டது. இதனால் ஜெனி செழியனை விவாகரத்து செய்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதே போல, ஒரு வாரம் கழிய வருவதாக சொல்லிச் சென்ற கணேஷ் அடுத்து என்ன பிரச்சினை பண்ணப்போகின்றார் என்பதும் தெரியவில்லை.


இது ஒரு புறம் இருக்க அந்த சீரியலில் இனியா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நேகா. சமீபகாலமாக இவரை இந்த சீரியலில் அதிகமாகப் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் இவர் சன்டிவியில் புதிய சீரியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இனியா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகின்றாரா எனக் கேட்டு வருகின்றனர். மேலும் நேகா இதற்கு முதல் சன்டிவியில் வாணி ராணி சீரியலில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement