• May 20 2024

’விடாமுயற்சி’ படத்திற்கு வந்த சிக்கல்.. பார்ட்டி வைத்து கொண்டாடிய நயன்தாரா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும்விடாமுயற்சிபடத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் வந்து கொண்டிருக்கும் நிலையில் ரகசிய பார்ட்டி வைத்து நயன்தாரா கொண்டாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடித்ததுணிவுதிரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். அந்த படத்திற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வளவுக்கும் லைக்கா நிறுவனத்தை அஜித்துக்கு அறிமுகம் செய்ததே நயன்தாரா தான் என்பதும் அஜித்துக்காக ஒரு பெரிய தொகையை நயன்தாராவே லைக்கா நிறுவனத்திடம் சம்பளமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவரை படத்தில் இருந்து நீக்க வேண்டாம் என அஜித்திடம் நேரடியாகவே நயன்தாரா கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அஜித் பிடிவாதமாக வேறு இயக்குனரை போட வேண்டும் என லைக்கா நிறுவனத்திடம் சொன்ன பிறகுதான் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.



இதையடுத்து தான்விடாமுயற்சிதிரைப்படத்தில் மகிழ் திருமேனி இணைந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில்  நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கிளைமேட் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் லைக்கா தயாரித்தலால் சலாம்தோல்வி காரணமாக பணப்பிரச்சனை காரணமாகவும்விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடாமுயற்சிபடத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் வருவதை அறிந்த நயன்தாரா உள்ளுக்குள் சந்தோஷப்பட்டதாகவும் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து பார்ட்டி கொடுத்ததாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement