• May 25 2026

என் முதல் காதலன் கார் விபத்தில் உயிரிழந்தார்..! பிரபல நடிகையின் கண்ணீர் கலந்த பகிர்வு..!

shali / 1 year ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனதில் நினைவில் இருக்கும் படங்களில் ஒன்று "Kal Ho Naa Ho". இந்தப் படம் ஒரு காதல் காவியத்தின் முழு உயிராக அமைந்தது. 2003ம் ஆண்டு வெளியாகி பல கோடி மக்களின் மனதை வருடிய இந்தப் படம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸாகியுள்ளது.


அதனையடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் நெஞ்சை நெகிழவைக்கும் அனுபவங்களும், புகழ்ச்சிகளும் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் நடிகை பிரீத்தி சிந்தா கூறிய ஒரு உண்மைக்  கதை, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான், பிரீத்தி சிந்தா, சைஃப் அலி கான் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம், காதல், சிநேகம், உயிர், மறைவு மற்றும் உணர்வு என அனைத்தையும் திரைத்தாளில் வார்த்தது. 2003ல் இப்படம் வெளியாகி, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றது.


இதுவரை இந்தப் படத்தை மறக்க முடியாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள், இந்த ரீ-ரிலீஸை "நினைவுகளை மீட்டெடுக்கும் காவியம்" எனக் கூறுகின்றனர். “Kal Ho Naa Ho” படத்தை திரையில் மீண்டும் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது உணர்வுகளைப் பதிவு செய்தனர்.

அந்த ரசிகரின் உணர்ச்சிமிகு கேள்விக்கு, நடிகை பிரீத்தி சிந்தா உருக்கமான பதிலை வழங்கினார். அவரது பதில் ரசிகர்களின் இதயத்தை வருடியது. அது என்னவென்றால், “என் முதல் காதலன் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். Kal Ho Naa Ho படம் எப்போதுமே எனக்கு நெருக்கமானது. அந்த கதையில் என் வாழ்க்கையின் ஒரு பகுதி இருக்கிறது.” என்றார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement