பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாக்கியம் மயிலைப் பார்த்து சம்பளம் வாறதுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து மீனா மயிலுக்கு போன் எடுத்து, எனக்கு உங்களைப் பார்க்கணும் போல இருக்கு வழமையா போற கோவிலுக்கு வாங்க என்கிறார். அதைப் பாக்கியமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் செந்தில் மீனா போன் கதைக்கிறதைப் பார்த்துவிட்டு மயில் அக்காவோடயா கதைக்கிற என்று கேட்கிறார். அதை மீனா எப்புடியோ சமாளிக்கிறார். அதனை அடுத்து மீனா கோமதியோட கோவிலுக்குப் போய் நிற்கிறார். பின் கோமதி மீனாவைப் பார்த்து ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் என்று சொன்ன என்ன விஷயம் என்று கேட்கிறார்.

அதுக்கு மீனா ஒருத்தவங்க இருக்காங்க உங்களுக்கும் அவங்களைத் தெரியும் நீங்களும் அவங்களும் கதைக்கணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோமதி என்னடி புதிர் போடுற என்கிறார். அதைத் தொடர்ந்து மயில் பாக்கியத்தைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்திருக்கிறதைப் பார்த்து மீனா கோபப்படுறார்.
பின் மீனா கோமதியோட கதைக்கத் தான் உங்களை வரச்சொன்னேன் என்கிறார். அதைக் கேட்ட மயில் எனக்கு என்னவோ இது சரியா படல என்கிறார். அதனை அடுத்து மீனா எனக்காக நீங்க அத்த கிட்ட பேசுங்க என்கிறார். பின் மயிலைப் பார்த்த கோமதி கோபத்தோட பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!