• Mar 29 2025

தனுஷின் மேல் பழி போட்டு நயனுக்கு செம்பு தூக்கிய மன்சூர் அலிகான்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு விடயம் தான் தனுஷ் - நயன்தாரா வழக்கு வாக்குவாதம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் தற்போது பிரபல நடிகர் மன்சூர் அலிகான் குறித்த விடயம் தொடர்பில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மிகவும் வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.


அதாவது தனுஷ் சமீபத்தில் தனது உழைப்பை நயன்தாரா சுரண்டியுள்ளார் என்று குறிப்பிட்ட விடயத்திற்கு மன்சூர் பதிலடி கொடுத்துள்ளார்."தனுஷ் பெரிய பாலிவுட் அளவுக்கு உயர்ந்திருக்கார் இதெல்லாம் பெரிசு படுத்தலாமா நயன்தாரா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க வெறும் ஒரு 10 கோடி தானே; ஒரு செக்கன் வர்ரதுக்கெல்லாம் காசு கொடு காசு கொடுன்னு கேட்டா தமிழனுக்கு என்ன மரியாதை "என நச்சுன்னு நல்ல பதிலை வழங்கியுள்ளார்.


மற்றும் ஒரு பத்திரிகையாளரை பார்த்து நீ என்ன நயன்தாரா ரசிகனா சும்மா சும்மா அதையே கேட்டுட்டு இருக்கா என கேட்டு பத்திரிகையாளர்களை வாய் மூடச்செய்துள்ளார்.

Advertisement

Advertisement