• Apr 26 2024

சாரா அர்ஜுன் தான் நந்தினி என்று சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்திச்சு- ஓபனாக பேசிய பொன்னியின் செல்வன் பட சந்தோஷ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வரலாற்றுப் பின்னணியில் வெளியாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. 

இந்தப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.இப்படம் வெளியாகி நல்ல வசூலையும் பெற்று வருகின்றது.விரைவில் இப்படம் 300 கோடி வசூலை எட்டும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியிருந்து.


இப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் தான்.இந்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்த நடிகர் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.அவருடைய பெயர் சந்தோஷ். குறிப்பாக இரண்டாம் பாகத்தின் துவக்க காட்சியில் நடிகர் சந்தோஷின் நடிப்பு பாராட்டினைப் பெற்று வருகின்றது.

அதேபோல ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாப்பாத்திரத்தில் சிறுவயது நந்தினியாக நடித்தவர் சாரா அர்ஜுன். இவர் 2011 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் ன்.இதையடுத்து இவர் தமிழில் சைவம் என்ற படத்தில் நடித்து மீண்டும் தமிழ் மனதை கொள்ளை அடித்தார். 


அந்த வகையில் அண்மையில் சந்தோஷ் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் தன்னுடன் ஜோடியாக சாரா நடிக்கப் போகின்றார் என்று சொன்னதும் நம்பவில்லையாம்.காரணமட தெய்வத்திருமகள் படம் இப்போ வந்த மாதிரி தான் இருந்திச்சு அதுக்குள்ள அந்த படத்தில் நடித்த பொண்ணு வளர்ந்திருச்சா என்று இருந்திச்சாம்.

மேலும் சாராவின் நடிப்பு ரொம்ப எதார்த்தமாக இருந்ததாகவும் அவருடைய நடிப்பைப் பார்த்து தான் வியந்து போனதாகவும் சாரா தான் தன்னுடன் நடிக்கப் போகின்றார் என்பது தனக்கு அதிர்ச்சியாக இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement