• Apr 27 2024

மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா? திடீரென இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் முரளி. இவர்  1984 ஆம் ஆண்டு பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய பூ வாசம், இதயம், ஆனந்தம், பாச கிளிகள் போன்ற இன்னும் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். 

இவ்வாறு தமிழில் உச்சந் தொட்ட நடிகராக இருந்த இவர் இறுதியாக தனது மகனான அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இதன்பின், மாரடைப்பு காரணமாக செப்படம்பர் 8ஆம் தேதி 2011 ஆம் ஆண்டு அவர் மரணமடைந்தார். ஷோபா என்பவரை 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என இரு மகன்களும் காவ்யா என்ற மகளும் இருக்கிறார்.

இவர் மரணமடைந்ததைத் தொடர்ந்த இவரது மகனான அதர்வா பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் மனைவியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.







Advertisement

Advertisement

Advertisement