• Apr 20 2024

புது பிஸினஸ் தொடங்கிய அர்ஜுன் மகள்... அதுவும் இந்தத் தொழிலா... இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை உலகத்தில யாருமே செய்யலயாம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வெற்றிக் கொடி நாட்டி வந்தவர் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாகவும் திகழ்ந்து வருகின்றார். 


தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்றால் அது எப்போதுமே நம்ம அர்ஜுன் தான். ஏராளமான வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அர்ஜுன் சமீபகாலமாக வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அதுமட்டுல்லாது அடுத்ததாக இவர் விஜய்யின் 'தளபதி 67' படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாக பேச்சு ஒரு சில தகவல்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றன. 


இவ்வாறாக நடிப்பில் பட்டையை கிளப்பி வந்த அர்ஜுன் கடந்த 1988-ஆம் ஆண்டு நடிகை நிவேதிதாவை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 


இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை எல்லோருக்குமே அதிகளவில் தெரியும். அவர் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவிலும் விஷாலுக்கு ஜோடியாக 'பட்டத்து யானை' என்ற படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பின்பு தெலுங்கு திரையுலகப் பக்கம் சென்றுவிட்டார்.


மூத்த மகள் ஐஸ்வர்யாவை ஹீரோயினாக்கிய நம்ம அர்ஜுன், இளைய மகள் அஞ்சனாவை சினிமா பக்கம் கூடி கொண்டுவரவில்லை. இதற்கான காரணம் என்னவெனில் அவருக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லை என்பதாகும். 


இந்நிலையில் தற்போது யாருமே எதிர்பார்க்காத வண்ணம் தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் அஞ்சனா. அதாவது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தற்போது இவர் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவரது நிறுவனத் தயாரிப்புக்களின் ஸ்பெஷல் என்னவென்றால், அந்த ஹேண்ட் பேக்குகள் அனைத்தையும் பழ தோல்களைக் கொண்டு உருவாக்கி அதனை விற்பனை செய்கிறார்.

இவ்வாறான ஒரு புதுமையான ஐடியா இதுவரை எந்த நிறுவனத்திற்கும் வராத நிலையில், உலகிலேயே அத்தகைய முறையில் தயாரித்து விற்பனை செய்யும் முதல் நிறுவனமாக அஞ்சனாவின் சர்ஜா நிறுவனம் விளங்கி வருவதாக கூறப்படுகிறது. 


மேலும் இந்நிறுவனத்தின் தொடக்க விழாவானது ஐதராபாத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார்.

அர்ஜுன் மகள் அஞ்சனாவின் இந்த பிஸினஸ் சக்சஸ்புல் ஆக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறதோடு இவரின் புதிய  முயற்சிக்கு பாராட்டுக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement