• Jul 27 2024

கில்லி 2.0 பற்றி மனம்திறந்த இயக்குநர் தரணி.. இதுவரை யாருக்கும் தெரியாத சீக்ரெட் இதோ..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலில் சொல்லியடித்த திரைப்படம் தான் கில்லி.  தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி சுமார் 20 கோடி ரூபாய் வரை வசூலிட்டி உள்ளது.

இந்த படத்தின் வெற்றியை இதில் நடித்த நடிகை திரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் தயாரிப்பாளர் தரணி ஆகியோர் உட்பட அனைவருமே கொண்டாடி வருகின்றார்கள்.

மேலும் இதன் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், விநியோகஸ்தர் சக்தி வேலன் அவர்களுடன் இயக்குனர் தரணி உள்ளிட்டோர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, சினிமாவை விட்டு விடாதீர்கள், வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க என்று கோரிக்கையும் வைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

தமிழ் சினிமாவில் கில்லி, தூள், குருவி, ஒஸ்தி,தில் ஆகிய படங்களை இயக்கியவர் தான் தரணி. பல ஆண்டுகளாக புதிய படங்களை இயக்காமல் இருக்கும் அவர் மீண்டும் படம் இயக்க ஆரம்பிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இந்த நிலையில், தற்போது கில்லி படத்தின் இயக்குனரான தரணி, அதில் நடித்த விஜய் பற்றி பழைய சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், கில்லி படத்தில் கபடி காட்சிகள் ரொம்ப கரெக்ட்டாக வர வேண்டும் என்று உண்மையான கபடி மாஸ்டரை வரவைத்து விஜய்க்கு இரண்டு நாள் ட்ரைனிக் கொடுக்கப்பட்டது.

அந்த படத்தில் மருதமலை முருகா என காமெடியாக பாடிய பாட்டும் முதலில் நான் டப் பண்ணும் போது அப்படியே விஜய் பண்ணியதாக தெரிவித்த தரணி, அதில் ஜீப்பை தூக்கும் காட்சி பற்றி சொல்லும் போது ஒரு மாதிரி பார்த்தாரு. ஆனாலும் தூக்கிட்டார் என்றார். 

மேலும், 20 வருஷம் கழித்தும் தற்போது கில்லி படம் ஹிட்டானது. இது கிட்டத்தட்ட கில்லி 2.0 போல தான் என கலக்கலாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement