• Jul 27 2024

விஜய் படத்தில் ஷாருக்கான், மம்முட்டி, மகேஷ்பாபு.. நெல்சனின் மாஸ் பிளான்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் நெல்சன் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மீண்டும் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தில் ஷாருக்கான், மம்மூட்டி, மகேஷ்பாபு ஆகியோர்களை கொண்டு வருவேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் திரை உலகில் ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அதன் பின்னர் ’டாக்டர்’ ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ படங்களை இயக்கினார் என்பதும் அவருடைய படங்கள் அனைத்துமே சூப்பர் வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. 

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா உள்ளிட்ட பிரபலங்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்த நெல்சனின் ஐடியா மிகப்பெரிய அளவில் சக்சஸ் ஆனது என்பதும் அந்த படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. 



இந்த நிலையில் நேற்று நடந்த சினிமா விழா ஒன்று கலந்து கொண்ட நெல்சன் ’மீண்டும் தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தில் ஷாருக்கான், மம்மூட்டி, மகேஷ்பாபு ஆகியவர்களை நடிக்க வைப்பேன் என்றும் அந்த படம் ஒரு மாஸ் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் ’தளபதி 69’ படத்துடன் தான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக விஜய் அறிவித்துள்ளதை அடுத்து நெல்சனின் இந்த கனவு நிறைவேறுமா என்பது சந்தேகமே. ஒருவேளை மீண்டும் நடிக்க முடிவெடுத்தால் முதல் படம் நெல்சனுடன் தான் என விஜய் தரப்பு கூறியிருப்பது ஒரு ட்விஸ்ட்டாக கருதப்படுகிறது.

மேலும் ‘ஜெயிலர் 2’ படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த நெல்சன் இந்த படம் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் எதுவும் முடிவாகவில்லை ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு ஆச்சரியமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement