• May 06 2024

பாதிதான் என் படம் மிச்சம் சமாளிப்பு ரத்னம் இயக்குனர் ஹரி ஓபன் ஸ்பீச்! அப்ப பாக்குறவன் பைத்திய காரணா?

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

சமீப காலத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கி பரபரப்பில் இருக்கும் திரைப்படம் என்றால் ரத்னம் திரைப்படம் எனலாம். இந்த திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியதை தொடர்ந்து இதன் இயக்குனர் கூறிய வார்த்தை மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


சாமி , சிங்கம் , பூஜை போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்  இயக்குனர் ஹரி ஆவார். இவர் சமீபத்தில் விஷாலை வைத்து ரத்னம் திரைப்படத்தை இயக்கி இன்று இது வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிடவில்லை என்ற பிரச்சனை போகும் போது தற்போது இதன் இயக்குனர் ரசிகர்களை கோவப்படுத்தும் படியாக பேசியுள்ளார்.


அவர் கூறுகையில் “என்னை எங்கேயும் நான் முழுநேர படைப்பாளி என அடையாளப் படுத்தியது கிடையாது. நான் ஒரு Semi-Creatorதான். பாதி என்னுடைய Creation. மீதி சமாளிஃபிகேஷன் நல்ல நடிகர், நடிகை, காமெடியை வைத்து படத்தை சமாளித்துவிடுவேன். கொஞ்சமாக படித்து 60 மார்க் எடுத்து பாஸ் ஆகும் பிரிவைச் சேர்ந்தவன்தான் நான்” என கூறியுள்ளார். இதை பார்த்த பலர் அவ்வாறென்றால் படம் பார்க்கவரும் ரசிகர்களை ஏமாற்றுகின்றாரா? பாதி படைப்பை பார்க்கவரும் மக்கள் பைத்தியக்காரர்களா? என விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement