தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவர் முதன்முதலில் 'தர்மத்தின் தலைவன்' என்னும் படத்தின் மூலம் தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது மொத்தம் 200 இற்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அத்தோடு 'வருஷம் 16, கிழக்கு வாசல், தாலாட்டு, பாடவா, வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், அண்ணாமலை, சின்னத்தம்பி, மன்னன் சிங்காரவேலன், உத்தம புருஷன்" என நெஞ்சை விட்டு அகலாத பல படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் கமல், ரஜினி, பிரபு,சத்யராஜ் என அன்றைய முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஜோடியாக நடித்திருந்தார். இதற்காக ரசிகர்களால் குஷ்பூவிற்கு கோயில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக தான் மாறி இருக்கின்றன. அதாவது "மன்னன், அண்ணாமலை' போன்றவற்றிலும் சமீபத்தில் 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களிலும் தோன்றியுள்ளார்.
குஷ்பூ-ரஜினி ஜோடியானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியிருந்தது. அதிலும் குறிப்பாக அண்ணாமலையில் வரும் குஷ்பூவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. அதில் 'கொண்டையில் தாழம்பூ' பாடலை பாடாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு குஷ்பூ ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்து இருந்தார்.
அத்தோடு இறுதியாக ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாதுரை' படத்தில் காமியோ ரோலில் குஷ்பூ வந்து ரசிகர்களை மீண்டும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இவர் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்த குஷ்பூ, அது குறித்தான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அப்புகைப்படத்திற்கு கீழே "ஒரு கப் தேநீர் மற்றும் சிரிப்புடன் இணைந்து சூப்பர் ஸ்டாருடன் ஒரு சாதாரண சந்திப்பு.
இது மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் மதிப்புமிக்க நிறுவனத்தில் இருப்பதில் எப்பொழுதும் மகிழ்ச்சி சார். அந்த அன்பு மற்றும் கருணை வார்த்தைகளுக்கு நன்றி" என குறிப்பிட்டு பதிவு ஒன்றினையும் இட்டுள்ளார். இப்பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!