• Apr 19 2024

குறும்படம் போட்ட ஆண்டவர்... குழப்பத்தில் போட்டியாளர்கள்... மாஸாக வெளிவந்த ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 3ஆவது வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் கடந்த வாரம் சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யார் என்ற கேள்விக் குறியோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 


அந்தவகையில் இன்றைய தினத்திற்குரிய முதல் ப்ரோமோவில் "பழி போடுறது ஈஸி, ஆனால் பழியைத் தாங்கிறது கஷ்டம் என்பதை அவங்களுக்கு புரிய வைக்கணும் எனவும், அத்தோடு சில பேரை காப்பாற்ற வேண்டும், சில பேரை யார் நினைச்சாலும் காப்பாற்ற முடியாது" எனவும் கூறி ரசிகர்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தார் நம்ம ஆண்டவர். 

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. இதில் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' டாஸ்க்கை பற்றிப் பேசுகின்றார் ஆண்டவர். அதாவது யார் அந்த டாஸ்க்கில் தள்ளி விட்டது எனக் கேட்கின்றார். அதற்கு அசீம் தனலட்சுமியை சாட்டி இருக்கின்றார். அதற்கு அசல் கோளாரும் உடந்தையாக இருக்கின்றார்.  


இதனையடுத்து தனலட்சுமி தான் தப்பு பண்ணவில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றார். மேலும் adk, மஹேஸ்வரி, அசீம் ஆகியோர் இவர் மேல் பழி போட்டதாகவும் கூறுகின்றார். அது மட்டுமல்லாது தான் தப்பு பண்ணி இருந்தால் எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்பதாகவும், வெளியே போவதாகவும் தனலட்சுமி கூறியிருந்தமையை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுகின்றார் ஆண்டவர். 

அதனைத் தொடர்ந்து ஒரு குறும்படம் ஒன்று வெளியாகின்றது. இந்த குறும்படத்தின் வாயிலாக யார் வெளியேறுவார்கள் என்பது தெரிந்து விடும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். 

இதோ அந்த ப்ரோமோ..!


Advertisement

Advertisement

Advertisement