• Apr 27 2024

நயன் மற்றும் விக்கியின் வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக வெளியாகிய புதிய அறிக்கை- விதி மீறல் செய்த மருத்துவமனை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவுலகில் சில ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் நட்சத்திர தம்பதிகள் என்றால் அது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தான். கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் தற்போது இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.

திருமணமான நான்கே மாதங்களில் திடீரென நயன்தாராவும் விக்னேஷ்வனும் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்த பல கேள்விகளும் இருந்தது நான்கு மாதத்தில் குழந்தை இரட்டை குழந்தை பெறுவதற்கு பல தடையில் இருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.


ஆனால் ஆறு வருடத்திற்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றது என்றும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தே தாம் வாடகைச் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து தகவல்களும் வெளியாகியிருந்தது. இவர்களின் இந்த விவகாரம் குறித்து விசேட தனிக்குழு விசாரணை நடத்தி வரப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா விக்னேஷ் சிவன் முறையான ஆதரங்களை சமர்ப்பித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுத்தவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பிள்ளை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் சரியான நெறிமுறைகளை பின்பற்றியதாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2016ம் ஆண்டே பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும் அது தொடர்பான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

 தம்பதியினரில் யாாராவது ஒருவருக்கு குறைபாடு ஏற்பட்டால் மாத்திரமே இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் தம்பதியினர் இருவருமே கடந்த 2020 ம் ஆண்டே இதற்கான சிகிச்சைகளை பேணப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சரியான ஆவணங்களை மருத்துவ நிர்வாகம் முன்வைக்க தவறியதாகவும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவாரணைககழு புகார் அளித்துள்ளது. அதில் இவர்களுக்கு குடுமப வைத்தியராக இருந்தவர் சரியான சிகிச்சைகளை பரிந்துரை செய்யவில்லை என்றும் அவர்கள் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளை தனியார் மருத்துவமனை ஒழுங்ககாப் பேணவில்லை எனவும் இதனால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றதுஃ

Advertisement

Advertisement

Advertisement