• Apr 19 2024

பிள்ளை இருக்கும் நிலையில் என் கணவன் கள்ளத்தொடர்பு-நிரூபிக்கமுடியாமல் தத்தளிக்கும் டிவி நடிகை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

காதல் கணவரான ராஜீவ் சென்னை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார் டிவி நடிகை சாரு அசோபா. மேலும் ராஜீவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சாரு குற்றம் சாட்டியுள்ளார்.


 பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பி ராஜீவ் சென்னும், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரு அசோபாவும் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான கையோடு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.அத்தோடு லாக் டவுன் நேரத்தில் சாருவை விட்டுவிட்டு சென்றுவிட்டார் ராஜீவ். அதன் பின்னர் மீண்டும் சேர்ந்தார்கள். இவ்வாறுஇருக்கையில்  கர்ப்பமான சாரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜியானா சென்று என்று பெயர் வைத்தனர்.


குழந்தை பிறந்த பிறகு பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் பிரிந்து வாழ்ந்தார்கள். எனினும் இதையடுத்து ராஜீவை மீண்டும் ஏற்றுக் கொண்டார் சாரு. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் ராஜீவ், சாரு அசோபா பிரிந்துவிட்டனர். இம்முறை விவாகரத்து பெறுவது நிச்சயமாம்.



அத்தோடு ராஜீவ் சென் பற்றி சாரு அசோபா தெரிவித்ததாவது, மீண்டும் சேரும் பேச்சுக்கே இடமில்லை. இரண்டாவது முறை ராஜீவுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு என்று நினைக்கிறேன். எப்பொழுது பிரச்சனை ஏற்பட்டாலும் ராஜீவ் மாயமாகிவிடுவார். அவருக்கு கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று நம்புகிறேன். ராஜீவுக்கு அதிகம் கோபம் வரும். என்னை திட்டியிருக்கிறார். இரண்டு முறை கையை ஓங்கியிருக்கிறார் என்றார்.



நான் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டார் ராஜீவ். அத்தோடு நான் சீரியல் ஷூட்டிங்கில் இருந்தபோது என்னிடம் இருந்து தள்ளி இருக்குமாறு சக நடிகர்களுக்கு மெசேஜ் அனுப்பினார். அவருக்கு கள்ளத்தொடர்பு இருக்கிறது. ஆனால் அதை என்னால் நிரூபிக்க முடியவில்லை என்று சாரு கூறியுள்ளார்.



ராஜீவ் சென் கூறியதாவது, நான் எங்கு செல்கிறேன் என்பது சாருவுக்கு தெரியும். மேலும் அவர் என்னிடம் சொல்லாமல் பல முறை மும்பையில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். அவரின் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் தான் அவர் இருக்கும் இடம் தெரிய வந்தது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement