• Mar 29 2024

6மாதம் இலங்கையில் சிறைவாசம்... வீட்டில் அடி உதை.. நிரோஷா-ராம்கியின் காதல் வாழ்க்கையில் இத்தனை கொடுமைகளா.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிரோஷா. இவர் தனது சிறுவயது முதலே நடிப்புத் துறையில் நுழைந்து விட்டார். அதிலும் தனது சொந்தத் தந்தைக்கே மகளாக நடித்திருப்பார். மேலும் இவர் தன்னுடைய படிப்பிற்காக சென்னை, லண்டன், கொழும்பு எனப் பல இடங்களிற்கும் சென்றிருக்கின்றார்.


இவர் எம்.ஆர்.ராதாவின் மகள் மட்டுமல்லாது நடிகை ராதிகாவின் தங்கையும் கூட. இவருக்கு ராஜு, மோகன் என்ற இரண்டு அண்ணன்களும் உள்ளனர். ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பின் மீது அந்தளவிற்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் பின்னர் அந்த நடிப்பிலேயே ஊறிப் போனார்.

இவர் தனது அக்கா ராதிகாவுடன் எடுத்த ஒரு புகைப்படம் பல இடங்களுக்கும் பரவத் தொடங்கவே அதனைப் பார்த்துவிட்டு ஒரு சில இயக்குநர்கள் இவரை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அந்தவகையில் மணிரத்னத்தின் 'அக்கினி நட்சத்திரம்' படத்தில் நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.


அதனைத் தொடர்ந்து கமல் ஹாசனுடன் இணைந்து 'சூர சங்காரம்' என்ற படத்தில் நடித்தார். மேலும அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்களும் வந்து குவியத் தொடங்கின. அவ்வாறு கிடைத்த ஒரு படம் தான் 'செந்தூரப்பூவே'. அந்தப் படத்தில் தான் இவருக்கும், ராம்கிக்கும் இடையிலான காதலும் உருவாகத் தொடங்கியது.


ஆரம்பத்தில் இவருக்கு ராம்கியைப் பிடிக்கவே பிடிக்காது. இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை தான் வரும். இப்போ வரைக்கும் 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை யூஸ் பண்ணினதே இல்லையாம். படத்தில் நடிக்கும் போது கூட "தொடும் போது என்னைக் கேட்டிட்டு தொட மாட்டீங்களா" எனக் கேட்டு ராம்கியிடம் சண்டை போடுவாராம்.


இவ்வாறு கீரியும் பாம்புமாக இருந்து வந்தவர்கள் நாளடைவில் நண்பர்களாக மாறத் தொடங்கினர். மேலும் செந்தூர பூவே படப்பிடிப்பின் போது நிரோஷா நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஒரு விபத்து நடந்தது. அந்த சமயத்தில் இவருக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் ராம்கி தான் இருந்தார். அப்போதிருந்து தான் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.


ஆனால் நிரோஷாவின் வீட்டில் சினிமாவில் இருப்பவர்களை காதலிக்க கூடாது, அவங்கள கல்யாணம் பண்ணிக்க கூடாது என நிறையத் தடைகள் போட்டிருந்தனர். இருப்பினும் ராம்கி கூட போன் பேசும்போது ஒருநாள் வீட்டில் மாட்டி அடியும் வாங்கி இருக்கின்றார் நிரோஷா. இவ்வாறு வீட்டில் நிறைய பிரச்சினைகளை சந்தித்திருக்கின்றார்.


ஆனாலும் இவர்கள் இருவரும் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து நிறையப் பாராட்டுக்களும் வாங்கி இருக்கின்றனர். மேலும் ராம்கி கூட இணைந்து நடிக்க கூடாது என்று ராதிகா கூறி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தான் இணைந்த கைகள் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடிக்க இருந்த நிரோஷாவை மாற்றி அருட்பாண்டிக்கு ஜோடியாக நடிக்க வைத்தனர்.

ராம்கி மீதான காதல் அதிகரித்த நேரத்தில் நிரோஷாவை 6மாதம் வீட்டிலேயே இலங்கையில் அடைத்து வைத்தனர். ஆனால் நானே திரும்ப பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து இந்தியாவிற்கு வந்து விட்டேன். ராம்கி கூட 2வருடங்கள் இருந்தேன். அதன் பின்னர் 1995 இல் நாங்கள் திருமணம் பண்ணினோம்.


வீட்டை எதிர்த்து திருமணம் பண்ணியமையால் இரண்டு வருடங்களாக இவரது குடும்பம் இவருடன் பேசவே இல்லை. அதன் பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சம் ஆக பேச ஆரம்பித்தனர். இவ்வாறு பல தடைகளை தாண்டி தான் ராம்கியை திருமணம் செய்து கொண்டு இன்றுவரை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார். 

Advertisement

Advertisement

Advertisement