• May 20 2024

சித்ரா வந்தாலே கஞ்சா வாடை தான் வரும்…அதிர்ச்சி கிளப்பிய பிரபல நடிகர்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜே சித்ராவுக்கு கஞ்சா பழக்கம் இருந்தது என்றும் அவர் பக்கத்தில் வந்தாலே கஞ்சா வாடை வரும் என அவருடன் நடித்த பிரபல நடிகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய மரணங்களில் விஜே சித்ராவின் மரணமும் ஒன்று. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு சித்ரா நசரத்பேட்டையிலுள்ள ஹேட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தனது கணவர் ஹேமந்துடன் தங்கியிருந்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் இதுதொடர்பான வீடியோவில் அவர் கூறியிருப்பதாவாது,

விஜே சித்ரா திருவான்மியூர் ராஜாஜி நகரில் ஃபிளாட்ஸில் வசித்து வந்தார். மேலும் சித்ராவை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். சித்ரா ஒரு கலகலப்பான பெண்மணி. எப்போதும் ஜாலியாக இருப்பார். சித்ராவை பற்றி தெரியாமல் பேச வில்லை. தனிப்பட்ட முறையில் சித்ராவை பற்றி நன்கு தெரிந்தவன் என்பதால் பேசுகிறேன்.

ஆனால் கடந்த சில நாட்களாக சித்ரா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் குறிப்பாக சித்ராவின் கணவர் ஹேமந்த் மற்றும் சித்ராவின் தோழி ரேகா நாயர் ஆகியோர் கூறி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சித்ரா குறித்து பேசியுள்ளார்.

நானும் சித்ராவும் சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்து வந்தோம். மேலும் அதில் நடித்த நளினியும் சித்ராவும் அம்மா மகள் போன்று பழகி வந்தனர். நளினி சமைத்து எடுத்து வரும் சாப்பாட்டை சித்ரா ருசித்து சாப்பிடுவார். இதை எப்படி சமைத்தீர்கள் என்றும் வெகுளியாக கேட்பார். சித்ராவை செட்டில் உள்ள எல்லோரும் கலாய்ப்பார்கள்.

ஆனால் சித்ரா எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார். மேலும் குழந்தை உள்ளம் கொண்டவர். எப்போதும் அவர் முகத்தை கடுகடுவென்று நான் பார்த்ததே இல்லை. எல்லோருக்கும் சித்ராவை பிடிக்கும். ஆனால் சித்ராவுக்கு நிறைய சம்பாதிக்க என்ற ஆர்வத்தை காட்டிலும் வெறி இருந்தது. மேலும் எப்படியாவது நிறைய சம்பாதிக்க வேண்டுமென்றே இருந்தார்.

எங்களுக்கு சண்டையில்தான் அறிமுகமானது. ஷூட்டிங் செட்டில் 4,5 கார்கள் இருக்கும். என் காரில் பிரஸ் என்று ஒட்டப்பட்டிருக்கும். ஒரு நாள் சித்ரா காரில் போலீஸ் என்று ஒட்டப்பட்டிருந்தது. எனினும் இதைப்பார்த்த நான் உன் காரில் போலீஸ் என்று ஒட்டப்பட்டிருக்கிறதே யார் போலீஸ் என்றேன். என் அப்பா போலீஸ் என்றார்.

மேலும் அவர்தான் ரிட்டையர் ஆகிவிட்டாரே என்றேன், அதற்கு சும்மா ஒரு பாதுகாப்புக்கு சார் என்று தெரிவித்தார். அத்தோடு முடிந்துவிட்டது. அப்படிதான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. சித்ரா பொது நிகழ்ச்சிகளுக்கும் போவார். நகைக்கடை திறப்பு பள்ளிக்கூட விழா என பல நிகழ்ச்சிகளுக்கு போவார். இதற்காக 10 ஆயிரம் முதல் 25000 ரூபாய் வரை வாங்குவார்.

சித்ராவுக்கு பாய் ஃபிரண்ட் அதிகம். இதேபோல் சித்ராவுக்கு மது பழக்கமும் உண்டு. மேலும் கஞ்சா பழக்கமும் உண்டு. சித்ரா ரெஸ்ட் ரூமுக்கு சென்று வந்தால் கஞ்சா வாடை வரும். ஒரு முறை அந்த வாடையை வைத்து கேட்டேன். அதற்கு நளினி சித்ராதான் கண்டுக்காதீங்க என்றார். மேலும் அதிக போதைக்காக அவர் கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருந்தார். இவ்வாறு நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement