தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பல காலமாகத் திகழ்ந்து வருகின்ற ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். அன்று தொடக்கம் இன்றுவரை சினிமாத் துறையிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகின்றார்.
இவ்வாறாக மூத்த நடிகராக இருக்கின்ற விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்களும் என விஜயகுமாருக்கு மொத்தமாக 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்த 5 மகள்களிலும் வனிதாவுடன் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக குடும்பத்தினர் யாருமே அவருடன் கதைப்பதில்லை. இவர் தவிர்ந்த ஏனைய நான்கு மகள்களும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் இவ் ஐந்து பிள்ளைகளில் நால்வர் சினிமாவில் தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அந்தவகையில் இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். இதனால் அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 1997-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் சந்தோசமாக வசித்து வருகிறார்.
நடிப்பில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் அனிதா எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அனிதா விஜயகுமார் தற்போது தொடை தெரிய குட்டைக் கவுன் அணிந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்கள் ஆனவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!