• Nov 12 2025

வாழ்க்கையை அதன் போக்கில் ஓட விடுங்க.. உணர்ச்சியுடன் பேசிய விஜய் சேதுபதி!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி, எப்போதும் தனது நேர்மையான பேச்சாலும் எளிமையான நடையாலும் ரசிகர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர். பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை புதுப்பித்து காட்டும் அவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, தனது வாழ்க்கை அனுபவங்களை திறம்பட பகிர்ந்துள்ளார். குறிப்பாக, கடனுடன் வாழும் அனுபவம் குறித்து அவர் கூறிய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.


நடிகர் விஜய் சேதுபதி தனது உரையின்போது, “நான் ஆயிரத்தில் சம்பாதித்த போது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன். ஆனாலும் அந்தக் கடன் பிரச்சனை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழக் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்.” எனக் கூறியிருந்தார். 

அவரின் இந்த எளிமையான, ஆனால் ஆழமான கருத்து பலருக்கும் பெரும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. பணம், புகழ், வெற்றி அனைத்தையும் பெற்றிருந்தாலும், வாழ்க்கையின் உண்மை சவால்கள் ஒருபோதும் நின்றுவிடாது என்பதையே விஜய் சேதுபதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி கூறிய “கடனுடன் வாழ கற்றுக்கொண்டேன்” என்ற வரி, இன்று பலரின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement