தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி விஜயகாந்த் பற்றிய செய்திகள், அவரது ரசிகர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது திருமண நாள் நினைவுகள் மற்றும் விஜயகாந்தின் வாழ்க்கை குறித்து உருக்கமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

நிகழ்ச்சியின் மேடையில் பேசுகையில் பிரேமலதா, "அந்த கடவுளே எனக்கு கொடுத்த வரம் தலைவர் விஜயகாந்த். என் வாழ்க்கையில் எங்கள் திருமண நாள் தான் மிக மிக முக்கியமான நாள். தலைவர் விஜயகாந்த் ஒரு மகனை அரசியலுக்காகவும், மற்றொருவரை திரையுலகத்துக்கும் விட்டு சென்றுள்ளார்." என்று உருக்கமாக கூறியிருந்தார்.
இந்த உரையில், திருமண நாள் அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், பிரேமலதாவின் உருக்கமான பேச்சினைக் கேட்ட மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் சிந்தியுள்ளார். இந்தக் கருத்து தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன.
Listen News!