• Mar 09 2026

வடிவேலு ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தார், அதற்கு நானே சாட்சி- நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த பயில்வான்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் வடிவேலு.தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார். இதனாலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். 

பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார்.இருப்பினும் இடையில் ஏற்பட்ட சில குழறுபடிகள் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கிருந்த இவர் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.


வடிவேலு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவுடன் அவர் மீது புதிய குற்றச்சாட்டுக்கள் பாய ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அவர் யாரையுமே வளரவிட மாட்டார் என்று அவருடனேயே பணியாற்றியவர்கள் பேச ஆரம்பித்தனர். ஒன்றிரண்டு பேர் மட்டும்தான் சொல்வார்கள் என்று பார்த்தால் அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே சென்றது. அதேபோல் பெண்கள் விஷயத்திலும் அவர் கொஞ்சம் வீக் என்ற பேச்சும் சமீபகாலமாக எழுந்திருக்கிறது.

இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து பேசியிருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒருமுறை பாண்டிசேரியில் ஒரு ஷூட்டிங் நடந்தது. 


நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் ஓ என கத்தினார். நானும், தயாரிப்பு நிர்வாகியும் சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்க்கையில் ஒரு பெண் இருந்தார். அவரது அந்தரங்க உறுப்பை வடிவேலு ஏதோ செய்துவிட்டார். பிறகு அந்தப் பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தோம். அந்தப் பெண் வடிவேலு அழைத்ததற்கு வரவில்லை. சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார்" என்றார்.


Advertisement

Advertisement