தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் தலைமையிலான கட்சி, 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சியாக இருந்தபோதிலும் இத்தகைய முன்னிலை பெறுவது தமிழக அரசியலில் முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது.

இந்த நிலவரத்தை தொடர்ந்து, விஜய் தான் அடுத்த முதலமைச்சராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த உற்சாகம் வெளிப்படையாகக் காணப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது உணர்ச்சிகரமான கருத்தை பகிர்ந்துள்ளார். “விஜய்யை மக்கள் தலைவராக மட்டும் அல்லாமல் தங்களுள் ஒருவராகக் கண்டதால் இந்த வெற்றி சாத்தியமானது. மக்களின் கனவுகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Listen News!