• Mar 04 2026

சிவகார்த்திகேயனின் பெருமிதம்..! எனது வளர்சிக்கு இவர்கள் தான் காரணம் ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது வசூல் வெற்றிநாயகனாக வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் ரசிகர்களின் மனதைத் தொடும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.


இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அமரன்" திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. சாய் பல்லவி முதன் முதலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இப்படம், இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படம் பெரும் பாராட்டைப் பெற்றது.


இந்த வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "என்னுடைய தந்தையின் மரணம் எனது வாழ்க்கையில் பெரும் சோர்வை ஏற்படுத்தியது. அந்த மனஅழுத்தத்தில் சினிமாவில் எனது பயணம் தொடங்கியது. என் முயற்சிகள் ரசிகர்களின் தசைநரம்புகளைத் தொடும் போது, அவர்கள் கொடுத்த விசில்களும் கைத்தட்டல்களும் எனக்கு மீண்டும் உயிர்நாடியாக மாறின. அது எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த மருந்தாக இருந்தது," என்று தனது உருக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.


அவரின் இந்த வார்த்தைகள், ரசிகர்களின் உள்ளங்களில் மேலும் இடம் பிடித்துள்ளன. இதுவரை அவர் நாயகனாக நடித்துள்ள திரைப்படங்கள் அவரைத் தனித்துவமான நட்சத்திரமாக உயர்த்தியுள்ளன. தற்போது காத்திருப்பை உண்டாக்கியுள்ள முருகதாஸ் படமும் வெற்றிப் பாதையில் இணையுமா என பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement