• Apr 15 2026

மாமல்லபுரத்தில் ஒன்று திரண்ட த.வெ.க செயல்வீரர்கள்... விசிலுடன் ஆரம்பமானது கூட்டம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களது தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இன்று ஜனவரி 25 ஆம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் முக்கியமான செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.


இந்த கூட்டம், தவெக கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் முன்பே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த 2,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம், தவெக கட்சி தனது அமைப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முயற்சித்து வருகிறது என்பதும் தெளிவாகிறது.

கூட்டம் தொடங்கியதிலிருந்தே, ஹோட்டல் வளாகம் முழுவதும் அரசியல் கோஷங்களாலும், ஆதரவுக் குரல்களாலும் அதிர்ந்தது. தவெக தலைவர் விஜயை நேரில் காண வந்த செயல்வீரர்கள், உற்சாகத்தில் தொடர்ச்சியாக விசில் அடித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அத்துடன், பிப்ரவரி இறுதியில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கும் நிலையில், தவெக கட்சிக்கு “விசில்” சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement