சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சாமியார் சொன்ன விஷயங்களை நம்பிய விஜயா, மீனா இந்த வீட்டில் இருந்து வெளியே போக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் அண்ணாமலை, அவற்றை எல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறுகிறார்.
அதற்கு பிறகு, சிந்தாமணிக்கு கால் செய்து, நடந்தவற்றை எல்லாம் கூறி அழுகிறார் விஜயா. இதைக் கேட்ட சிந்தாமணி, “தான் நினைத்தது நடந்து விட்டது” என நினைத்து, அந்த சாமியார் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று கூறுகிறார்..மேலும் அவரை நம்பவில்லை என்றால் நாளை கோவிலுக்கு வந்து பாருங்கள் என்றும் கூறுகிறார்
அதற்கு பின்பு அங்கு வந்த மனோஜ், அந்த சாமியார் ஏற்கனவே என்னை சந்தித்தார். அவரும் எனக்கு ஒரு ரகசியம் சொன்னார். அதில் ரோகிணியை தான் மீண்டும் திருமணம் செய்வேன் என கூறிய விஷயத்தை சொல்ல, அப்படி என்றால் இவர் சொல்வதெல்லாம் உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் விஜயாவுக்கு வருகின்றது.

இன்னொரு பக்கம் மீனாவும் மாமாவுக்கு இப்படி சொன்னதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு எதுவும் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை என்று மன வருத்தம் அடைகின்றார். ஆனாலும் முத்து சாமியார் சொன்னது எல்லாம் பொய், நீ அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று தைரியம் கொடுக்கின்றார்.
இறுதியில் ரோகிணி மனோஜ்க்கு கால் செய்து, பாட்டு பாடி, மனோஜை சதி வலையில் விழ வைக்கிறார். அதன்படி, 'நான் உனக்கு டிவோர்ஸ் தருகிறேன், ஆனால் நான் சொல்லும் இடத்திற்கு நீ மட்டும் தனியாக வர வேண்டும், அதையும் உன் அம்மாவிடமும் தெரிவிக்கக் கூடாது. அப்படி நீ வந்தால் டிவோஸ் தருகிறேன்' என்று கூறுகிறார்.
அதனை மனோஜ் சந்தோஷமாக நம்பி அதையும் ஏற்றுக் கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!