• Apr 26 2024

ஒரே நேரத்தில் திருமணமாகாத இரண்டு ஹீரோயின்கள் போட்ட பதிவு..குழம்பி தவிக்கும் ரசிகர்கள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகைகள் பார்வதி மற்றும் நித்யா மேனன் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் பெரும்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான்  நடிகை நித்யா மேனன்.மேலும்  இவர் தனுஷூடன் நடித்து, அண்மையில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் நித்யாமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியுடன், குழந்தைக்கான நிப்பிள் இருப்பது போன்ற  ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.



அத்தோடு அவர் அதில் 'உறுதியாகி விட்டது... அதிசியம் தொடங்குகிறது' என்றும் தெரிவித்து இருந்தார். இதனைப்பார்த்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாகியுள்ளதாக கருதி, வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை பார்வதியும், அதே போன்றதொரு பதிவை வெளியிட்டார். தொடர்ந்து அந்த வரிசையில், மலையாளம் மற்றும் தமிழில் பின்னணி பாடகியாக வலம் வரும் சயனோரா பிலிப்பும் அதே பதிவை வெளியிட்டார்.



இதனால், எதற்காக இந்தப்பதிவை இவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. அத்தோடு ஒரு சிலர் இது படத்திற்கான பிரோமோஷன் என்றும் இன்னும் சிலர், இது ஏதாவது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான பதிவு என்றும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement