• Jul 01 2024

ஆர்த்தி முகத்த எத்தன நாள் தான் பார்க்கிற... ஜெயம் ரவி குடும்பம் பற்றி சுசித்ரா போட்ட வெடிகுண்டு

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவுக்கு போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த நாக சைதன்யா, சமந்தா, தனுஷ், ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷ் தனது காதல் மனைவியான சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த அதிர்ச்சி தகவல் தீர்வதற்கு முன்பே ஜெயம் ரவியும் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பானது. எனினும் ஆர்த்தி முதலில் 'காதல் என்பது வாழ்க்கை அது வார்த்தை அல்ல' என பதிவிட்டிருந்தார்.

இதனால் சற்று நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பேரிடியாக ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்த ஜெயம் ரவியின் போட்டோக்கள் எல்லாத்தையும் டெலிட் செய்திருந்தார். இதனால் அவர்களின் விவாகரத்து பேச்சு உறுதியானது.


இந்த நிலையில், தற்போது பிரபல பாடகி சுசித்ரா மீண்டும் ஒரு சர்ச்சை பேட்டியை அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், இந்த விவகாரத்து விஷயத்தில் எனது ஆதரவு ஜெயம் ரவிக்குத்தான். ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது. அவர் மிகவும் ஆடம்பரமான பெண். அப்படி இருக்கும் போது ஜெயம் ரவி டே அண்ட் நைட்டாக வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். 

அவர் வீட்டுக்குச் சென்றாலும் ஆர்த்தி என்ன மனநிலையில்  இருப்பார் என்று சொல்ல முடியாது. அவர் அழகாக இருப்பதன் காரணத்தினால் தான் இத்தனை ஆண்டுகள் அவரின் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டார் ஜெயம் ரவி. ஆனால் அழகு என்பது எத்தனை நாளைக்கு இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியின் குடும்பம் ஏனையவர்கள் போல் அல்லாமல் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களின் குடும்பம் எப்போதுமே மற்றவர்களை மதிப்பவர்களாக காணப்படுகின்றார்கள் என்று சுசித்ரா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement