• Sep 19 2024

உதயநிதியிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்-இது தான் காரணமாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகமானார்.

மேலும் அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நூறு கோடி வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது.

இவ்வாறுஇருக்கையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் அந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து இருக்கிறார்.

ட்ரைலரில் சிவகார்திகேயன் சிறு வயதில் இருந்தே தந்தது ambition என்ன என முடிவு செய்ய முடியாமல் ஒவ்வொரு முறை ஒவ்வொன்றாக கூறிக்கொண்டிருக்கிறார். சயின்டிஸ்ட், மீம் கிரியேட்டர், டான்சர், கிரிக்கெட்டர் என அவரது ஆசை மாறிக்கொண்டே இருக்கும்.

மேலும் ட்ரைலரின் இறுதியில் 'பேசாம நாம அரசியலுக்கு போய்டுவோமா' என காமெடியன் விஜய்யை பார்த்து அவர் கேட்க, 'பொய்யெல்லாம் பேசனும்பா' என விஜய் பதில் கூறுகிறார். 'அப்போ வேணாம், அப்போ வேணாம்' என சிவா கூறுகிறார்.

இப்படி ஒரு காட்சி ட்ரைலரில் வந்த நிலையில், அந்த விழாவுக்கு வந்திருந்த நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சற்று அதிர்ச்சியானார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த விசயத்திற்காக மேடையில் பேசும்போது உதயநிதியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement