• Jan 26 2026

முத்துவிடம் சிக்கப்போகும் ரோகிணி.? மனோஜுக்கு விடுதலை! குழப்பத்தில் விஜயா

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் ,  ராணியை திருமணம் செய்யுமாறு மனோஜிடம் முத்து சொல்லுகின்றார் .    மேலும் தாலியை கழட்டி அவருடைய புருஷனிடம் கொடுக்குமாறு ராணிக்கு சொல்லுகின்றார்.  

இதனால் கோபப்பட்ட  ராணியின் புருஷன், இவ  என் பொண்டாட்டி என்று சொல்ல, இப்போதுதான் அது உனக்கு தெரிகிறதா? என முத்து அவருக்கு கன்னத்தில் அடிக்கிறார். 

அதன் பின்பு  தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு,  மனோஜ் மீது எந்த தப்பும் இல்லை. அவர்கள் எங்கள் மீது பழி போட்டதால் தான் இப்படி செய்தோம் என்று  இருவரும் மன்னிப்பு கேட்கின்றனர். மேலும் முத்து அவர்களிடம் இதை கடிதத்தில் எழுதி வாங்கி வீடியோ ஆதாரத்தையும் அழிக்கின்றார். 


மேலும்  இந்த பணத்தை எடுத்தது ஒன்று மனோஜா இருக்கணும் இல்லை என்றால் ரோகிணியாக இருக்கணும் என்று சொல்ல, விஜயா யோசிக்கின்றார்.  

இன்னொரு பக்கம் வித்யா  தனது திருமணத்திற்கான பத்திரிகையை கோவிலில் வைத்து முத்து மீனாவுக்கு கொடுக்கின்றார்.  இதன்போது  க்ரிஷ் அம்மாவுடைய போன் நம்பரை வாங்கி தருமாறு வித்யாவிடம் மீனா கேட்கின்றார். இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement