• Sep 20 2024

பிரபல இயக்குநருக்காக பிரான்சில் மனம் உருகி பிரார்த்தனை செய்த ராதிகா..எதற்கு தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாரதிராஜா அழகான பல படங்களை இயல்பான கேரக்டர்களுடன் தமிழ் சினிமாவிற்கு தந்தவர். அரங்கத்திற்குள் நடந்துவந்த சினிமாவை வெளிப்புற படப்பிடிப்பில் நடத்திக் காட்டியர் என்று தான் கூற வேண்டும். பல நாயகிகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அந்த வகையில் ராதிகா உள்ளிட்டவர்கள் பின்னாளில் முன்னணி நாயகிகளாக வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்த பாரதிராஜா, தற்போது டைரக்ஷனை விட்டுவிட்டு நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ஈஸ்வரன், ராக்கி, குற்றமே தண்டனை, எங்க வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து பாரதிராஜா நடிப்பில் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.



எனினும் சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா. தனுஷ் மற்றும் நித்யா மேனனுடன் இணைந்து படத்தில் இவர் செய்திருந்த அலப்பறைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அத்தோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாரதிராஜா. வழக்கமான செக்கப்பிற்கு சென்றபோது உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதால் தற்போது மருத்துவமனையில் அவர் ஓய்வெடுத்துவருவதாக அவரது மகன் மனோஜ் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் அவரது உடல்நலன் தேற திரையுலக பிரபலங்கள் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தற்போது நடிகை ராதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். எனினும் தற்போது பிரான்சில் உள்ள ராதிகா, லூர்து சர்ச்சில் பாரதிராஜாவிற்காக கேண்டில் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.



தன்னுடைய வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த பாரதிராஜா சார், நல்லா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு லூர்து சர்ச்சில் தான் வேண்டிக் கொள்வதாக அவர்  தெரிவித்துள்ளார்.இதனிடையே அவர் நார்மலாக உள்ளதாகவும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement