• Sep 20 2024

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பிரபல நடிகையின் கண்டிஷன்? அதிர்ச்சியில் இயக்குனர்கள்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

2018 ஆம் ஆண்டு வெளியான லைலா மஜ்னு படத்தில் லைலா என்ற கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை திரிப்தி டிம்ரி. இந்த படத்தில் இவரது நடிப்பு மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்பு பல் புல் திரைப்படத்திலும் இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனிமல் படத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார் திரிப்தி டிம்ரி. இந்த படம் ரன்பீர் கபூர், ராஷ்மிகா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலரது நடிப்பில் உருவானது. இதில் மிக முக்கிய கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை திரிப்தி டிம்ரி.

இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கவர்ச்சியும் எக்கச்சக்கமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையே பெற்றுக் கொடுத்தது.


அதன் பிறகு விக்கி கௌஷலுடன் 'பேட் நியூஸ்' என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு தற்போது ராஜ்குமார் ராவுடன் இன்னொரு படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பத்து மாதங்களில் 40 லட்சத்திலிருந்து தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி உள்ளாராம் நடிகை திரிப்தி டிம்ரி.

அதாவது ஒரு படத்திற்கு ஆரம்பத்தில் 40 லட்சம் வாங்கி வந்த இவர், இறுதியாக நடித்த பேட் நியூஸ் படத்தில் 80 லட்சத்தை சம்பளமாக பெற்றுள்ளார். அதன்பிறகு இவர் நடித்த படங்கள் வெற்றி மற்றும் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகளைக் கருதி அவருடைய சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement