திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘LOKAH’ திரைப்படம், சமீபத்தில் வெளியாகிய டீசரில் இடம்பெற்ற பெங்களூரு பெண்கள் தொடர்பான ஒரு வசனத்தின் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக கர்நாடகாவைச் சேர்ந்த சில சமூகங்கள் மற்றும் பொதுமக்கள், அந்த வசனம் மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்க நடிகர் துல்கர் சல்மான் இயக்கும் ‘Wayfarer Films’ தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “LOKAH படத்தின் டீசரில் இடம்பெற்ற வசனம் சில பார்வையாளர்களின் உணர்வுகளை பாதித்திருப்பதை நாங்கள் கவனித்துள்ளோம். இது எங்கள் நோக்கம் அல்ல. எனவே அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கர்நாடக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியமைக்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த தீர்மானம், சமூக ஊடகங்களில் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், இவ்வாறு முன்கூட்டியே சர்ச்சையைச் சரிசெய்ய தயாரிப்பு நிறுவனம் எடுத்த நடவடிக்கை பொறுப்புள்ள மனப்பான்மையை காட்டுவதாக பாராட்டப்படுகிறது.
Listen News!