• Apr 26 2024

6 வருடங்களாக லவ் டார்ச்சர் அனுபவித்து வரும் நித்யா மேனன்…அதுவும் 30 மொபைல் எண்களிலா..? வியப்பில் ஆழ்த்திய தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளைஞர்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டு அவர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். மலையாள நடிகையாக இருந்தாலும் இவர் அதிகம் பிரபல்யமாகி இருப்பது என்னவோ தமிழ் சினிமாவில் தான். அந்தவகையில் இவர் தமிழில் நடிகர் நானி நடிப்பில் வெளியான 'வெப்பம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

இப்படத்தினைத் தொடர்ந்து 'காஞ்சனா 2', மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' போன்ற படங்களில் நடித்திருந்தார். எனினும் இவரை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சென்றது விஜய்யின் படம் தான். அதாவது அட்லீ இயக்கத்தில் வெளியான 'மெர்சல்' என்ற படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் தேன்மொழி என்ற மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்த கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்தினுடைய அனைத்துக்கட்டப் பணிகளும் முடிவு பெற்ற நிலையில் இப்படம் ஆனது வருகிற ஆகஸ்ட் 18-ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இவ்வாறாக படங்களில் நித்யா மேனன் பிஸியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. இதன்பின் அது உண்மையில்லை வதந்தி என விளக்கம் அளித்தார் நித்யா மேனன்.

இந்த நிலையில் இது தொடர்பாக மற்றுமோர் செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படி ஒரு வதந்தி வைரலாக பரவியதற்கு சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் காரணமாம். அவர்தான் நடிகை நித்யா மேனனை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

இந்த செய்தி வைரலானதை தொடர்ந்தே நடிகை நித்யா மேனன் உண்மையை உளறியிருக்கின்றார். அதாவது அந்த இளைஞரால் தான் 6 வருடங்களாக லவ் டார்ச்சர் அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார். விடாது தொடர்ந்து அவர் தனக்கு அழைப்பினை ஏற்படுத்துவதாகவும், தான் பலமுறை அவர் அழைக்கும் மொபைல் எண்ணை பிளாக் செய்திருந்ததாகவும் கூறி இருக்கின்றார். எனினும் வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து அவன் தொல்லை தருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

அதுமட்டுமல்லாது இதுவரை அவனிடமிருந்து வந்த 30 மொபைல் எண்களை தான் பிளாக் செய்துள்ளதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளமையானது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாது இப்படியுமா லவ் டார்ச்சர் கொடுப்பாங்க எனப் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement