• Apr 26 2024

கள்ளக் காதலன் படத்தில் எல்லாம் நடிக்கமாட்டேன்- 4 கோடி ரூபாய் கொடுத்தும் நடிக்க மறுத்த நயன்தாரா.!

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை நயன்தாரா. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.குறிப்பாக வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக படுகவர்ச்சியாக நடித்து பிரபுதேவாவுடன் மீண்டும் காதல் வயப்பட்டார்.இதனால்  பிரபுதேவாவின் மனைவி நயன்தாராவை பயங்கரமாக அவமானப்படுத்திய நிலையில், நயன்தாரா அந்த உறவில் இருந்து வெளியில் வந்தார். 


அதன்பின் நயன்தாரா 2011ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தில் சீதாவாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நயன்தாராவிற்கு அதிக விருதுகளும், புகழும் கிடைத்தது. இதன் பின்னர் தமிழில் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் ரி என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே பிரசாந்த் நடிப்பில் வெளியாகும் அந்தகன் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. இப்படத்தில்  முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை 4 கோடி ரூபாய் கொடுத்து படக்குழு புக் செய்த நிலையில், அப்படத்தின் கதையை கேட்டு நயன்தாரா வேண்டாம் என உதறித்தள்ளினாராம்.

அதாவது அத்திரைப்படத்தில் கள்ளக் காதலனுக்காக தனது கணவனை கொல்லும் மனைவியாக நடிக்குமாறு நயன்தாராவிற்கு கதை சொல்லப்பட்டதாம்.ஆனால் எனக்கும் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என கொடுத்த நான்கு கோடி ரூபாய் பணத்தையும் நயன்தாரா திருப்பிக் கொடுத்துவிட்டாராம் என்றும் புதிய தகவல் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement