• May 20 2024

சொந்த ஊருக்கு தனது கணவனுடன் சென்ற நயன்தாரா-யாரோட இருவரும் நிற்கிறாங்க என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய காதல் ஜோடியாக இருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இத் திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இயக்குநர்கள் அட்லி, கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். இந்து பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணமும் நடைபெற்றது. திருமணத்தை அடுத்து இருவரும் திருப்பதிக்கு சென்றிருந்தனர்.

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்ததோடு ரசிகர்களின் சப்போர்ட் தங்களுக்கு தேவை என்றும் இருவரும் இணைந்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் இருவரும் நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுள்ளனர். அங்கு தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய தோழிகளுடன் மற்றும் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா மேக்கப் இல்லாமல் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement