• Jul 27 2024

முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் வெளியே வந்த தீபிகா படுகோன்.. போட்டோ எடுக்க குவிந்ததால் பரபரப்பு..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் அவர் வெளியே வந்த நிலையில் அவரை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளது.  

இந்த நிலையில் கர்ப்பமான பின் தீபிகா படுகோன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதும் அவர் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இதற்காகவே பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ’கல்கி 2898 ஏடி’ படத்தில் தீபிகா படுகோன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில் அவரது காட்சியின் படப்பிடிப்பை முன்கூட்டியே முடித்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை அடுத்து அவர் வேறு படங்களில் ஒப்பந்தமாகவில்லை என்பதும் டெலிவரிக்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து தான் அவர் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங் உடன் வந்தார். வெள்ளை நிற ஆடையில் கர்ப்பமான வயிற்றுடன் தீபிகா வந்ததை அடுத்து அவரை புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ரன்வீர் சிங், தனது மனைவி தீபிகா படுகோனேவை பாதுகாப்பாக வாக்கு சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களித்தவுடன் மீண்டும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தீபிகா படுகோன் கர்ப்பமான வயிற்றுடன் வெளியே வந்ததை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


Advertisement

Advertisement