• May 19 2024

கலைக் கண்ணாடியோடு பார்த்தா மாயா தான் வின்னர்! நள்ளிரவில் மாயா செய்த மேஜிக்? Conversation -ல் உருகிய ஃபேன்ஸ்!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத முறையில் முற்றிலும் மாறுபட்ட ரீதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அது போலவே இம்முறை இரு வீடு என பிரிக்கப்பட்டு சுவாஸ்யமாக நடைபெற்றது.

பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் காணப்பட்ட மிகவும் துடிதுடிப்பான போட்டியாளர்கள் என்றால் அதில் ஒரு சிலர் தான் காணப்பட்டார்கள். அதிலும் இறுதியாக, மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா ஆகியோரே ஆட்டத்தை சூடுபிடிக்க வைத்தனர்.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை காணப்படுகிறது.


அதன்படி, மாயா கிருஷ்ணன் ஒரு மேடை கலைஞராக, நல்ல பாடகராக, நடிகராக, என்டர்டெயினராக எல்லாமுமாக மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

அத்துடன், சமூக வலைதளத்தில் மாயா தான் டைட்டில் வின் பண்ணுவார் என மாயாவின் ரசிகர்கள் ஆணித்தரமாக நம்பினார்கள். எனினும் இறுதியில் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மாயா, இதுவரை யாருக்கும் பேட்டி கொடுக்காத நிலையில், நேற்றிரவு தனது ரசிகர்களுடன் பேசியுள்ளார்.

அதன்படி, ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டாரத்துடன் சுமார் 1.30 மணித்தியாலங்கள் ரசிகர்களின் அன்பு வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்துள்ளார்.

தற்போது குறித்த வீடியோ, ரசிகர்களின் பேச்சு என்பன வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement