• May 20 2024

ஒரு மாதம் கழித்து நயன்தாராவின் திருமணப்புகைப்படங்கள் வெளியாக இது தான் காரணமா?- இப்படி ஒரு மாஸ்டர் பிளான் இருந்ததா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். இப்படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து முன்னணி இயக்குநராக அறிமுகமாகினார்.

இப்படத்தின் மூலம் நடிகை நயன்தாராவைக் காதலிக்க ஆரம்பித்தார் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் கோவில்கள், சினிமா நிகழ்ச்சி, குடும்பவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் என பலவற்றில் ஒன்றாக சென்று வந்திருந்தனர்.இந்த காதல் ஜோடி ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

மகாபலிபுரம் ரிசாட்டில் தடபுடலாக இவர்களது திருமணம் நடைபெற்றது. 200பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அதில் 30 விவிஜபிக்கள் கொடுக்கப்பட்டு அழைப்பிதழ் உடன் க்யூஆர் கோடு காண்பித்தால் உள்ளேவரமுடியும் என டைட் செக்யூரிட்டியுடன் திருமணம் நடந்தது.

திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, அனிருத்,சூர்யா,ஷாருக்கான், அட்லி ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்று மட்டுமே தகவல்கள் வெளிவந்தன. அதுகுறித்த எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் தாலி கட்டும் ஒரு சில புகைப்படத்தை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், பொத்தி பொத்தி வைத்திருந்த புகைப்படத்தை கடந்த இருநாட்களாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். அதாவது நயன்தாரா தனது திருமணத்தை வைத்து பக்கா பிசினஸ் பிளான் போட்டு இருந்தார். ஆனால், தற்போது அந்த நிறுவனம் தொகை அதிகமாக இருப்பதாக கூறி பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அப்செட்டான நயன்தாரா, ஒவ்வொரு போட்டோக்களையும் வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இனி நடிகையின் திருமண வீடியோவை பார்க்கும் ஆர்வமும் ரசிகர்களிடம் குறைத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement