• Apr 28 2024

லோகேஷ் கனகராஜின் மனைவி விஜயகாந்திற்கு நெருங்கிய உறவினரா?- இதனால் தான் சினிமா வாய்ப்பு கிடைச்சதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல உதவி இயக்குநர்களுக்கு Inspiration ஆக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியது இல்லை.

லோகேஷ் கனகராஜ் தொடக்கத்தில் வங்கி பணியாளராக இருந்தார் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறு வங்கி பணியாளராக இருந்த ஒருவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.


அதாவது விஜயகாந்த்தின் ராவுத்தர் புரொடக்சன்ஸில் சௌந்தர் என்று ஒருவர் பணியாற்றி வந்தாராம். அவர்தான் விஜயகாந்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பாராம். அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்ததாம். 

அதன்படி மனோபாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தாராம். ஆனாலும் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்பதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைத்தாராம்.அந்த சமயத்தில் சௌந்தர், தனது மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் வங்கி பணியாளரான லோகேஷ் கனகராஜை தனது மகளுக்கு திருமணம் முடித்துவைத்திருக்கிறார்.


 இவ்வாறு சௌந்தரின் மகளுக்கு கணவராக ஆன லோகேஷ் கனகராஜ், ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு சினிமா எடுக்க முயற்சிக்கிறார். அப்படி அவர் இயக்கிய குறும்படம்தான் “களம்”. இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்துதான் லோகேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் “மாநகரம்”. இவ்வாறு விஜயகாந்திற்கும் லோகேஷுக்கு இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement