• Jun 27 2026

உங்களுக்கு TRP வேண்டும்னா நாங்க நடிச்சு தாரோம்.! கையெடுத்து கும்பிட்ட ராதிகா

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் இன்று காலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது எதிர்பாராத மறைவு தமிழ் சினிமா உலகை மட்டுமல்லாது, ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக இயக்குநர் பாரதிராஜா மறைந்த சில நாட்களுக்குள் பாக்யராஜும் காலமானது திரையுலகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியால் “திரைக்கதை மன்னன்” எனப் புகழப்பட்ட பாக்யராஜின் மறைவு, ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதும், திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த பெருமளவில் திரண்டனர். அப்பகுதியில் சோகமான சூழல் நிலவியது.


இதேவேளை, இறுதி சடங்குகளை பதிவு செய்ய மீடியாக்கள் அதிகளவில் குவிந்ததால், பாக்யராஜின் உடலை ஆம்புலன்ஸிலிருந்து வீட்டுக்குள் கொண்டு செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழலும் ஏற்பட்டது.

இந்த நிலையில், நடிகை ராதிகா கண்ணீர் மல்க வெளியே வந்து செய்தியாளர்களை நோக்கி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். “கையெடுத்து கும்பிடுகிறேன்… சினிமா எங்களுக்கு உயிர். ஆனால் மனித உயிர் அதைவிட முக்கியம். தயவுசெய்து கொஞ்சம் தனிமை கொடுங்கள். உங்களுக்கு TRP வேண்டுமானால் நாங்கள் படத்தில் நடித்துக் கொடுக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

அவரது இந்த உருக்கமான வேண்டுகோளைத் தொடர்ந்து, அங்கிருந்த கூட்டம் சற்று விலகியதாக கூறப்படுகிறது. பின்னர் பாக்யராஜின் உடல் அவரது இல்லத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

இறுதி தருணங்களில் அவரது மகன் சாந்தனு, மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கலந்து கொண்ட காட்சிகள் அங்கிருந்தவர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது அவரது வீட்டில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement